ஆப்கானிஸ்தானில் வௌ்ள அனர்த்தங்களில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

 




 




ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணம் கடுமையான வௌ்ள பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது.

அங்கு 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.

பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.