. பருத்தித்துறை மீனவர்கள் 14பேர் இந்தியக் கரையோரக் காவற்படையினரால் கைது

 


இந்தியக் கடற்படரப்பில் சட்டரீதியற்ற முறையில் மீன்பிடித்தமைக்காக இயந்திரப் படகொன்றுடன் இலங்கையர் எழுவரை இந்தியக் கரையோரக் காவற்படை ஒன்றாகக் கைது செய்துள்ளது.

கன்னியாகுமாரி கடற்பரப்பில் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் அவதானிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து சென்ற இலங்கை மீனவர் 14 பேரை வியாழக்கிழமை, சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டியமைக்காகவும், கடலட்டை பிடித்தமைக்காக ஐந்து படகுகளுடன் இந்தியக் கரையோரக் காவற்படை கைது செய்திருந்தது