மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும் வெளிப்படுத்துங்கள் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும் வெளிப்படுத்துங்கள் என்று இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போதுஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.