ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

 


லெபனானில் வாகனம் ஒன்றை குறி வைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் கரையோரப் பிராந்தியத்தின் தளபதியான இஸ்மாயில் யூசப் பாஸ்,(Ismail Yousef Baz)என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் "ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் மூத்த அதிகாரி" என்பதுடன் அந்த அமைப்பில் பல பதவிகளை வகித்தவர், தற்போது கடலோரப் பிராந்தியத்தின் தளபதியாக செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.