ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏறி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

 


ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 440 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 386 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 245 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை