கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தூதுவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டார் .

 

 


 சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

 இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம்  இணக்கம் வெளியிட்டனர்.

இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க ,ஆளுனர் செயலக  செயலாளர் எல்.பி மதநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.