யுத்த காலத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

 

 


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில்  யுத்த காலத்தில்        நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை  விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளையை பெற்றனர்.

இதனையடுத்து   விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் பொலிஸார் புலனாய்வு பிரிவினர்  குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து   கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.