இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது .

 


சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அளவுக்கதிகமான மருந்தை உட்கொண்டு பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.