மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!















(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (15) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இப்போட்டியானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் பாடசாலை அதிபர்  பெரின்பராஜா  தலைமையில் இடம் பெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில்  சிறப்பு அதிதியாக டி. உதயகரன் ,ஜே. பிரபாகரன் வி. லவக்குமார் மற்றும்
   விஷேடஅதிதியாக எஸ். சக்கரவர்த்தி கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை 291 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும், இரண்டாம் இடத்தை 268 புள்ளிகளைப் பெற்று  அருந்ததி  இல்லமும், மூன்றாம் இடத்தை 259 புள்ளிகளைப் பெற்று நல்லாகினி  இல்லம் பெற்றுக் கொணடது.

இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்