இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 20ம் திகதி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.

 

 


 மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்தபோது, மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை,அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி செங்கலடிக்கு ஜனாதிபதி வருகை தந்தபோது, கொம்மாதுறையில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி, வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு, இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கௌ;ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு, எதிர்வரும் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.