மட்டக்களப்பு மட்டிக்களி திரௌபதி ஆலய வருடாந்த திருச்சடங்கு -2024

 
















சஜித்நாத்
மட்டக்களப்பு  மட்டிக்களி திரௌபதி ஆலய வருடாந்த பங்குனி உத்தர திருச்சடங்கு 2024.03.22  அன்று   வெள்ளிக்கிழமை    மாலை 7.00  மணிக்கு    திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. 2024.03.30 அன்று கும்பம் சொரியும் நிகழ்வுடன் திருச்சடங்கு நிறைவு பெற உள்ளது. .
இத் திருச்சடங்கின்  போது மத்திய நேரப்பூசை பகல் ஒரு மணிக்கும் ,இரவுப் பூசையானது இரவு ஒன்பது மணிக்கும் ஆரம்பமாகும் ..
எட்டாம் நாள் சடங்கு  2024.03.29  அன்று  தீ  மிதிப்பு வைபவம் பிற்பகல் 6.00 மணிக்கு இடம் பெற உள்ளது

இத் திருச்சடங்கின் போது நடை பெறும் அனைத்து பூசைகளிலும் பக்தர்கள்  கலந்து கொண்டு அன்னை திரௌபதா தேவியின் திருவருளை  பெற்றேகுமாறு  இறையன்போடு ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்