பாடசாலை மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

 


பாடசாலை மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபாட ஆசிரியர்  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேக நபர் நேற்று  கைது செய்யப்பட்டார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் நேற்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள் மூவரும்  கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.