சுற்றிவளைப்புகளில் 1,676 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


 நாடளாவிய ரீதியில்  பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (23) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,676 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 45 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 112 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.