தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

 













  தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் (Sandile Edwin Schalk) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்கள்  மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
 மாநகரசபை ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் அவர்களினால் மாலை சூட்டி  வரவேற்கப்பட்ட  உயா்ஸ்தானிகருக்கு  மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக  விரிவான  விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இவ் விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர்,  உள்ளிட்ட குழுவினர்  வருகை தந்திருந்தனர்.
இவ் நிகழ்வின் போது   உயர்ஸ்தானிகர் மற்றும்
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஆகியோர்   மாநகர ஆணையாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
தீயணைக்கும் படையின் பொறுப்பதிகாரி விவேகானந்தன் பிரதீபன், மாநகர சபையின் கணக்காளர், மாநகர சுகாதார பரிசோதகர்  தமராஜ், மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.