பதினாறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் , திருமணமான ஒருவர் பொலிஸாரால் கைது

 


பதினாறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய திருமணமான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி தனது தாயுடன் பியகம பெரக சந்திய பிரதேசத்தில் உள்ள விடுதி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், திருமணமான குறித்த இளைஞர் இந்த சிறுமியுடன் உறவைப் பேணியதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் சிறுமி விடுதியில் இருக்கும்போது அவர் மீது இந்தக் குற்றத்தை செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இவர்கள் இருவரும் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.