மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொதுமக்களின் பிரச்சினைகள் முறைபாடுகளை ஒன்லைன் மூலமாக தெரிவிக்க வசதி
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி. பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக தகவல் தொழினுட்பப் பிரிவினால் பொதுமக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக இலகுவாக பதிவு செய்யும் வசதி மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வசதியினை அனுகுவதற்காக பொதுமக்கள் http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/ எனும் இணைப்பிற்கூடாக இவ்வலைத்தளத்திற்குள் செல்லமுடியும். இங்கு தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள், முறைப்பாடுகளை பதிவிடுவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.