பெண்கள் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டன.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் நலிவுற்ற குடும்பங்களில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு மக்கள் நல செயல்பாடுகள் சேர்கிள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு அமைவாக செங்கலடி ஏறாவூர் பற்று, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி, மண்முனை மேற்கு வவுணதீவு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டன.


நிகழ்வு சேர்கிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தலைமையில் இடம் பெற்றது. இம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வௌ;வேறு நிகழ்வுகளாக இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகங்களின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவகர்கள், என முக்கிய அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.