கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

 


 கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர்  போல் ஸ்டீபன்ஸ், பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலியா அரசாங்கம், இலங்கையில் முன்னெடுப்பதற்கு உதவுவதாக உறுதியளித்தது .