நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை.

 


நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனூடாக விசேட வைத்திய நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவு நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.