கண்டியைசேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் .

 


இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

34 வயதான ஹசித் நவரத்ன, ஜூலை 2 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹசித் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.