குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை கைது .

 


லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றி கொடூர செயலில் ஈடுப்பட்டவரை லிந்துலை பொலிஸார் (25) மாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தனது பாட்டியின் ஆதரவுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.