மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

 

 


 மதுபானங்களின் விலைகளை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட்டின் விலையும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட்டின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.