ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 


இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் தேர்வுக்கான இணைய வழி விண்ணப்ப செயல்முறை ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.