13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி மகஜர் .

 


இந்தியாவிற்கு பயணம்  மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் 13வது திருத்தச் சட்டத்தினை  நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகளால்

  யாழ்ப்பாணம் துணைத் தூதரகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டது. வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் பிள்ளை தலைமையில் சென்ற குழுவினர் தூதரக அதிகாரி ராம் மகேஷ் அவர்களிடம் கையளித்தனர்.இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் துணைத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் பிள்ளை தலைமையில் சென்ற குழுவினர் தூதரக அதிகாரி ராம் மகேஷ் அவர்களிடம் கையளித்தனர்.

மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாழ்நாள் பேராசிரியர் பொ, பாலசுந்தரம் பிள்ளை

13வது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல்படுத்துமாறு சிவில்  சமூக பிரதிகளாக யாழ் இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்

 அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் முடிந்த வரையில்  13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு  கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கிறோம் என்றார்,