ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா கைது

 


சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் 09.06.2022 அன்று எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பியதற்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.