மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.

 



கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக்கு உதவுகின்றன, ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என்று பிராந்தியத்தின் ஆளுநர் உக்ரைனிய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.