சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர் சைனா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்காவிற்கு 3 விமானசேவைகளும், கட்டுநாயக்காவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானசேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன.