மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு ஐந்து கணனித் தொகுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு .

 

 






















. PROJECT 2030 இன் முழு அனுசரணையுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள i-tran தன்னார்வ கொடை நிறுவனத்தினால் Samarithan Hand அமைப்பினூடாக  மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 05 கணனித் தொகுதிகள்  பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்களிடம் இன்று காலை  கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் Samarithan hand அமைப்பின் பணிப்பாளர் திரு. D. ஹரிஷங்கர், 2030 PROJECT ஒருங்கிணைப்பாளரும், விவேகா பழைய மாணவர் சங்க செயலாளருமான வைத்தியர் திருமதி பிரமிளா சசிகுமாரன், பாடசாலையின் முன்னாள் அதிபரும், விவேகா பழைய மாணவர் சங்க ஆலோசகருமான திருமதி இந்திராணி புஷ்பராஜா, மற்றும் பாடசாலையின் அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன்,  உப அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு  நிகழ்வினை சிறப்பித்து இருந்தார்கள்..
தொடர்ந்தும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு  சகல   உதவிகளையும்  வழங்க PROJECT 2030 அமைப்பினர் முன்வந்திருப்பது குறிப்பிட்ட தக்கது