பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


தம்புத்தேகம என்ற பிரதேசத்தில் உள்ள 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் செயலி ஊடாக ஆபாசமான படங்கள் அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.