209வது மெதடிஸ்த நிறைவு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சேகரம் ஞாயிறு
பாடசாலை மற்றும் திருச்சபை மக்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிக்களுக்கான
பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புளியந்தீவு சேகரம் முகாமையாளர் அருட்பணி சுபேந்திரன் தலைமையில்
மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்,
அருட்பணியாளர்கள்,
மண்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர், புளியந்தீவு சேகரம் ஞாயிறு பாடசாலை
மாணவர்கள்,திருச்சபை மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.