பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன், 13 மணித்தியாலயத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

 


இந்தியா - தனுஸ்கோடியில் இருந்து இலங்கை - தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன், 13 மணித்தியாலயத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடல் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் கடலில் ஏற்படும் பொலித்தீன் மாசுபாடு குறித்தான பொது விழிப்புணர்வை மக்களிடையேயும் இன்றைய இளைஞர் சமுதாயத்திடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பாக்கு நீரிணையை நீந்திகடக்கும் முயற்சியை, ஜனாதிபதி சாரணர் விருதை பெற்ற குறித்த மாணவன் மேற்கொண்டார்.

இதனடிப்படையில், நேற்று முன்தினம் (27) நள்ளிரவு தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடி நோக்கிப் படகில் சென்ற மாணவன் மதுஷிகன், அங்கிருந்து நேற்று (28) அதிகாலை ஒரு மணியளவில் நீந்தத் தொடங்கினார். தொடர்ச்சியாக 14 மணித்தியாலங்கள் நீந்தி, தலைமன்னாரை நேற்று பிற்பகல் 3.05  வந்தடைந்த இவருக்கு, புதிய சோழன் உலக நிறுவனத்தினர் சாதனையை அறிவித்து, மாணவனுக்கு நினைவு சின்னமும் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு  மற்றும் மன்னார் அரசாங்க அதிபர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சாதனை மாணவனின் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.