யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது.