குளிருடனான காலநிலை காரணமாக இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


நாட்டில் நிலவும் குளிருடனான காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தைகளில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சிறப்பு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.