மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு சத்திய பிரமாண நிகழ்வு இடம் பெற்றது .

 


திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் அமைந்துள்ள தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான ‘சமுதாயத்தில் சவால்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகம், குழு செயற்பாடு பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது. 

இதன்போது, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. ஹம்சபாலன் வளவாளராக கலந்து கொண்டார். நிகழ்வில், மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு சத்திய பிரமாணமும்  செய்து கொள்ளப்பட்டது.