கடலுக்குள் பாய்ந்ததாக கூறப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது .

 


திருகோணமலை உற்த்துறைமுக கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது.

திருகோணமலை கஸ்தூரி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சுந்தரம் துசிந்தன் என்பவருடைய சடலமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுவள்ளங்களில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்தவர்கள் குறித்த நபர் கடலுக்குள் பாய்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த நபரை தேடும் பணிகள் அப்பகுதி மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீனவர்களால் அடையாளம் காணப்பட்டது என தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான அனுமதி போலீசாரால் வழங்கப்படாத நிலையில் போலீஸ் மற்றும் கடற்கரையின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இறப்பிற்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.