மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு .


 

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின் ஒன்றுகூடல் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவை பிரிவில் இயங்கி வரும் சிரேஷ்ட பிரஜைகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு சிரேஷ்ட பிரஜைகளின் சங்க தலைவர் தோமஸ் கந்தையா தலைமையில் ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது

சிரேஷ்ட பிரஜைகளின் சங்க தலைவர் தோமஸ் கந்தையா தலைமையில் நடைபெற்ற 2022 ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் திட்டமுகாமையாளர் நகுலேஸ்வரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான நிலக்சி நிருஷன் , தனுஜா கிரிசாந்தன் ,கிராம சேவை உத்தியோகத்தர் விக்டரின் டொமினிக் , மற்றும் ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உட்பட சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்