நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.

 


நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

அதேவேளை, ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.