விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 


பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான க.சேயோன்,நல்லரெட்ணம்,சி.வவானந்தன் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாரு கூறினார்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை என சொல்லப்பட்டது.இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டதற்கு காரணம் இலங்கை முழவதிலும் உள்ள பிரதேசங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு உள்ளது என்று காட்டுவதற்காகவே என்றார்.