வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 




மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தினரின் சமூக செயற்பாட்டின் ஓர் அங்கமாக வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 பாடசாலையின் அதிபர் திருமதி. சுமதி பத்மநாதன்  தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் லியோ கழகத்தின் பொறுப்பாசிரியர்களான திருமதி. S. பிளிங் டஸ் ஜூட், திருமதி. J. பிரமிதன், லியோ கழக தலைவர் த.சானுகா மற்றும் செயலாளர் எஸ்.திசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வினை நடாத்தியமை தொடர்பில் சமுகத்தினால் பாடசாலை லியோ கழக தலைவர் த.சானுகா மற்றும் செயலாளர் எஸ்.திசாரி ஆகிய மாணவிகளுக்கும் வின்சன்ட் பாடசாலைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு இம் முன்மாதிரியான செயற்பாடு தொடர்பில் பாடசாலையினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு மகிழ்சிகரமான சிறிய குழு விளையாட்டுக்களும் இடம்பெற்றது.