இலங்கையில், பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் அமைக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
“பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பொலிஸில் புகார் அளிக்க சரியான சூழல் இல்லை. ஒரு பெண் ஒரு பொலிஸ் நிலையத்திற்கு துன்புறுத்துதல் பற்றி புகார் கொடுக்க வரும்போது பொலிஸ்துறையில் உள்ள அனைவரும் கூடிவிடுகிறார்கள். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் இரகசியத் தன்மையை உறுதி செய்ய குறைந்தது 13 பெண் காவலர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





