தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படவுள்ளது.

 


ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படவுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Andrew Giles அண்மையில் வெளியிட்டிருந்தார். இதன்படி ஒரு தசாப்த காலமாக தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்திருக்கும் சுமார் 19,000க்கும் மேற்பட்ட அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வெளிநாடுகளுக்கு(மூன்றாவது நாடொன்றிற்கு) செல்வது இலகுவாகவுள்ளது.

அகதிகளாகக் கண்டறியப்பட்டு தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் TPV அல்லது SHEV விசாக்களில் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களுக்கு இந்தக் கொள்கை பொருந்தும். அதேபோன்று ஜூலை 19, 2013க்கு முன் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களில் நிரந்தர விசாவைப் பெற்றுக்கொண்டவர்கள், தமது குடும்பங்களுடன் ஒன்றிணைவதற்கான(family reunion) நடவடிக்கைக்கு குறைந்த முன்னுரிமை வழங்கப்படும் நிலையில் இதனையும் அரசு திருத்தியமைக்கவுள்ளது.