திருத்த வேலை காரணமாக மட்டக்களப்பில் சில பகுதிகளில் மின் தடை .

 


பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 0-9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று புதன்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியியலாளர் அலுவக பிரிவுக்குட்பட்ட
ஜெயந்திபுரம் ,கருவப்பங்கேணி ,மாமாங்கம் ,அமிர்தகழி ,மட்டிக்களி , பாலமீன் மடு புன்னைச்சோலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக மின் பாவனையாளர்களுக்கு மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியியலாளர் அலுவகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.