ஓமானுக்கு வீட்டு வேலை பணிக்கு சென்று சித்திரவதை செய்யப்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டுமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் வேண்டுகோள்.

 

(கனகராசா சரவணன்)

 



 

இலங்கையில் இருந்து எனது மகளை டுபாயில் வீட்டு பணிக்கான வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏஜன்சி தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று  விற்பனை செய்துள்ளனர். அங்கு சித்திரவரை செய்யப்பட்டுவரும் எனது மகள் உட்பட விற்பனை செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 90 பெண்களை காப்பாற்றி  மீட்டுத்தருமாறு மட்டக்களப்பு ஓட்டுமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய  5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டுமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவை கணவர்விட்டுச் சென்றதுடன் வறுமையின் காரணமாக அவர் வெளிநாட்டு வீட்டு பணிபெண்ணாக செல்வதற்கு முடிவு செய்து களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சப் ஏஜன் ஒருவர் மூலம் கொழும்பிலுள்ள ஒரு ஏஜனிடம் தனது கடவுச் சீட்டை வழங்கியள்ளார்.

அவர்கள் டுபாயில் னகாரியாலயத்தில்  துப்பரவு  வேலைக்கான வெற்றிடத்துக்கு   அனுப்புவதாக தெரிவித்த நிலையில் கடந்த மாச் 3ம் திகதி கொழும்பில் பயிற்சி இருப்பதாக அழைக்கப்பட்டதையடுத்து அவர் அங்கு சென்று மாச் 6ம் திகதி அவரை ஓமானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனா.

இதன் பின்னார் சப் ஏஜன்சி கொழும்பு ஏஜன்சி காரன்கள் ஆள் ஆள் தெரியாமல் மாறிவிட்டார்கள் இதன் பின்னர் நான் கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சென்று எனது மகளை மீட்டுத்தருமாறு கோரினேன் அதற்கு அங்குள்ள பெண் அதிகாரி 8 இலச்சம் ரூபா தந்தால் மகளை மீட்டுத்தருவதாக தெரிவித்ததுடன் மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதன் பின்னர் நான் மட்டக்களப்பு  வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சென்றேன் அவ்வாறு 16 தரம் வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சென்றேன் அவர்கள் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதன்பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று முறைப்பாடு தெரிவித்து 6 தரம் சென்றேன் அங்கும் எதுவும் செய்யவில்லை இதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு சென்றேன் அவர்களும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை இவ்வாறு கடந்த 9 மாதங்களாக எனது மகளை மீட்பதற்காக  ஏறாதா காரியாலயம் இல்லை.

உனது மகளுக்கு ஓமானில் சித்திரவதை செய்கின்றனா அவருடன் அங்கு 90 பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக எனது மகள் வட்ஸ் ஆப் மூலம் வீயோ அனுப்பியுள்ளாh. எனவே மகளையும் அங்குள்ள 90 பேரையும் முதலில் காப்பாற்றி மீட்டுத்தரவும்

யாராக இருந்தாலும் சரி வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் செல்லவேண்டாம் ஏஜன்சிமார் கள்ள கடத்தலாக மனிதர்களை கடத்திச்சென்று ஆடு மாடுகளை விற்கின்றமாதிரி விற்கின்றான்கள். ஆகவே சட்டரீதியாக செல்லுங்கள் எனது மகள் போல போய் சிக்கிடவேண்டாம் எனது மக்ள் சென்று 9 மாதங்கள் இதில் என்னுடன் 3 தடவைகள் மாத்திரம் பேசியுள்ளார். மகளின் இ வயது பெண் பிள்ளை தற்போது அம்மா வேண்டும் என வீட்டின் வாசல் கதவில் தினமும்  காத்திருக்கின்றார்.

எனவே இளம் பெண்பிள்ளைகளை கொண்டு சென்று ஆடு மாடு போல விக்கின்றவர்களை கைது செய்யவும் அப்போது தான் நாடு முன்னேறும் எனவே இந்த குழந்தைக்கு தாய்வேண்டும் எனவே அவரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை அந்த பகுதியைச் சேர்ந்த பர்திமா ஸபீரா திருமணம் முடித்து 9. 10 வயது இருபெண் குழந்தையின் தாயாரான இவரின் கணவன் போதை பொருளுக்கு அடிமையாகிய நிலையில் வறுமையின்னாரணமாக வீட்டு பணிப் பெண்ணா ஒமுhனுக்கு சென்று ஒருவருடமாகின்ற நிலையில் தற்போது 3 மாதங்களாக எந்தவிமான தொடர்பும் இல்லை எனவே அவரை மீட்டு தாருங்கள் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.