2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை
மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர்
மாதம் 18 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும்
ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும்
நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.





