போலி செய்திகளை பரப்பும் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஊடக சட்டத்திற்கு துருக்கியின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இன்னும் 8 மாதங்களில் நடைபெறும் தேர்தலுக்கான எதிர்வு கூறல் கருத்துக்கணிப்புகளில் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன், பின்தங்கியுள்ள நிலையில், ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் உறுதியான பிடியை, இந்த விதிகள் உறுதிப்படுத்துகின்றன.
எர்டோகனின் இஸ்லாமிய AKP கட்சியால் இந்த விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும் துருக்கியின் எதிர்க்கட்சிகள் இந்த விதிகளை கடுமையாக எதிர்த்துள்ளன.