திருக்கோவில் கல்வி வலயத்தின் தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வாய்ப்பு

 


இணைந்த கரங்கள் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்தின் தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் பிரதி அதிபர் திரு.சிவயானம் அகிலன் தலைமையில் இடம் பெற்றது.

மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்விற்கு பாடசாலையின் ஆசிரியர்களான யோ.உமேஸ்வரன், சாத்விகன், குமரன் மேலும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான திரு.லோ.கஜரூபன், மற்றும் திரு. எஸ்.காந்தன் ஆகியோரினால் தரம் 01தொடக்கம் 11 வரை கல்விகற்கும் 30 மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.