இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்குக் காரணம், தனியார் துறையினரால் வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்கு மக்கள் பாரிய தொகையை வழங்க நேரிடுவதாக அமைச்சர் கூறுகிறார்.

எனவே, அரசு மருத்துவமனைகள் மூலம் சிறந்த மற்றும் திறமையான சேவைகளை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.