துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் படு காயமடைந்தார்.


 

 பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் படு காயமடைந்தார். இந்த சம்பவம் மாத்தறையில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கி தன்னிச்சையாக இயங்கியமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.