கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை?

 


நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கும் மருத்துவர்களுக்கும் கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பணம் இருந்தாலும் தனியார் துறையினரிடம் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 இவ்வாறான கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.