அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு ஸ்ரீமுருகன் ஆலய திருப்பணிச்சபையினரின் பூரண ஏற்பாட்டுடன் செல்வி அ.ருத்ரா அவர்களின் ஆன்மீகச்சொற்பொழிவு நிகழ்வு இடம்பெற்றது.

 

 

 


 

 

 சைவத்தை வளர்க்கும் இலங்கை தமிழ்திரையுலகின் நடிகை
அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு ஸ்ரீமுருகன் ஆலய பிரமோற்சவத்தின் போது முருகப்பெருமானின் அற்புதங்




களை மகிமைகளை அழகான தமிழ் உச்சரிப்புகளோடு ஆன்மீக அடியவர்களின் முன்பு மிகவும் அழகான முறையிலே சொற்பொழிவாற்றினார். ஆன்மீசொற்பொழிவாளர் நடிகை செல்வி அமிர்தரெத்தினம் ருத்ரா அவர்கள் தமிழரின் தனித்துவ இறைசக்தியாக திகழும் குமரக்கடவுளை பழந் தமிழிலக்கியங்களின் ஆதாரங்களையும் உசாத்துணையாக கொண்டு மிகவும் அற்புதமாக அடியவர்களுக்கு ஒப்புவித்தார்.

செல்வி அ.ருத்ரா அவர்கள் இலங்கையின் தமிழ்திரையுலகின் இளம்நடிகையாக வலம்வரும் செல்வி ருத்ரா அவர்கள் சைவம்வளர்க்கும் நோக்குடன் கிழக்கிலங்கையெங்கும் ஆலயங்கள்தோறும் சென்று தனது ஆன்மீக ஆளுமையினூடாக பரந்ததொரு ஆன்மீக ஞானத்தோடு நகைச்சுவையுணர்வும் இரண்டறக்கலந்து அடியவர்களுக்கு சலிப்பேற்படுத்தாவகையில் அழகுதமிழில் ஆன்மீக சொற்பொழிவுகளை அண்மைக்காலமாக மிகவும் காத்திரமான வகையிலே நிகழ்த்திவருகின்றார்

 கலைஞர்களை போற்றிபாராட்டும் அக்கரைப்பற்று பழந்தமிழர் பதியிலே அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு ஸ்ரீமுருகன் ஆலய திருப்பணிச்சபையினரின் பூரண ஏற்பாட்டுடன் இவ் ஆன்மீகச்சொற்பொழிவு நிகழ்வு மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது